Saturday, March 31, 2007

குர்ஆனிய வசனம் 62:11 இறங்கியதின் பின்னணி

500. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றி, ஒட்டகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்றுவிட்டனர். பன்னிரென்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், 'அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்'' (திருக்குர்ஆன் 62:11) என்ற வசனம் அருளப்பட்டது.

புஹாரி: 936 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

501. நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் உரையாற்றியபடி, '(நரகத்தின் பொறுப்பாளரான வானவர் மாலிக்கிடம்,) 'யா மாலிக் - மாலிக்கே! 'உங்களுடைய இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்' என்று (அந்தக் குற்றவாளிகள்) சப்தமிடுவார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 43:77) இறைவசனத்தை ஓத கேட்டிருக்கிறேன்.
புஹாரி: 3230 யஃலா பின் உமைய்யா (ரலி)

No comments: