Thursday, July 20, 2006

அல்லாஹ்வுக்கு இணைவைத்தலே மாபெரும் அநீதி

78- எவர் இறைநம்பிக்கைக் கொண்டு(பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திட வில்லையோ என்னும்(6:82) வசனம் அருளப்பட்டபோது அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமானதாகத் தென்பட்டது. ஆகவே அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தனக்குத் தானே அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்? ஏன்று கேட்டனர். ஆதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இந்த வசனம் குறிப்பிடுவது)அதுவல்ல, அது இணைவைப்பையே குறிக்கின்றது. என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே,நிச்சயமாக இணைவைப்பு மாபெரும் அநீதியாகும் என்று (அறிஞர்)லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றதே,(31:13)அதை) நீங்கள் கேட்கவில்லையா? என்று சொன்னார்கள்.

புகாரி-3429: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி)

No comments: