Showing posts with label வணக்கம். Show all posts
Showing posts with label வணக்கம். Show all posts

Saturday, January 17, 2009

அல்லாஹ்வின் ஆலயங்கள் கட்டுவதின் சிறப்பு.

1879. உஸ்மான் (ரலி) பள்ளியை விரிவுபடுத்திய போது 'நீங்கள் மிகவும் விரிவுபடுத்தி விட்டீர்கள்' என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு 'அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்'' என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்' என உஸ்மான் (ரலி) கூறினார்.

புஹாரி : 450 உபைதுல்லாஹ் அல் கூலானி (ரலி).

Friday, January 16, 2009

கணவனை இழந்த பெண்ணிற்காகவும், ஏழைக்காகவும் பாடுபடுபவரின் சிறப்பு!

1878. (கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கிப்பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5353 அபூஹுரைரா (ரலி).