Saturday, October 25, 2008

பாதையில் துன்பம் தரும் பொருட்களை அகற்றுதல்.

1682. ''ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதை விட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :652 அபூஹுரைரா (ரலி).

No comments: