Showing posts with label அகிலம். Show all posts
Showing posts with label அகிலம். Show all posts

Friday, December 26, 2008

கியாம நாளின் திகில்கள்.

1820. நபி (ஸல்) அவர்கள், '(அது) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள்'' எனும் (திருக்குர்ஆன் 83:6 வது) இறை வசனத்தை ஓதிவிட்டு, 'அன்று தம் இரண்டு காதுகளின் பாதிவரை தேங்கி நிற்கும் தம் வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப்போய் விடுவார்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4938 இப்னு உமர் (ரலி).

1821. மறுமை நாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6532 அபூஹுரைரா (ரலி).